/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்
/
பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்
ADDED : நவ 17, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்; இவருக்கு சொந்த-மான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது, லாரியில் இருந்து பேட்டரியை திருடிக்கொண்டு, வாலிபர் ஒருவர் டூவீலரில் தப்ப முயன்றார். இதைப்பார்த்த ஜெகதீஷ் மற்றும் சிலர், அந்த வாலிபரை துரத்திப்பிடித்து வெப்-படை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பேரிட்டரி திருடிய வாலிபர் தீபன், 23, ராசிபுரத்தானுார் பகுதியை சேர்ந்தவர் என, தெரியவந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

