ADDED : மே 23, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி : எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கடந்த, 2023ல் மரக்கடை கதவை உடைத்த மர்ம நபர்கள், கடையில் வைத்திருந்த, 5,000 ரூபாயை திருடி சென்றனர்.
இதுகுறித்து, மரக்கடை உரிமையாளர் கொடுத்த புகார்படி, திருட்டு வழக்கில் தீபக் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.மேலும், இதில் தொடர்புடைய வேறு நபரை தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டு கழித்து இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய, முத்துக்காப்பட்டியை சேர்ந்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.

