sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி'

/

'வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி'

'வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி'

'வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி'


ADDED : நவ 11, 2024 08:08 AM

Google News

ADDED : நவ 11, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ''வரும், 2026ம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது,'' என, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

ராசிபுரம் சட்டசபை தொகுதி, தி.மு.க., கிளை வார்டு செயலாளர்கள் தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ஜெகநாதன், துரைசாமி, ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு ராசிபுரம் சட்டசபை தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து, ராஜேஸ்குமார் எம்.பி., பேசுகையில், ''வரும், 2026ல் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்திருந்தால் கூட்டுறவு வங்கிகள் திவால் ஆகி இருக்கும். தி.மு.க., ஆட்சி வந்த பிறகு தான் கூட்டுறவு வங்கி மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us