/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை
/
வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை
ADDED : ஆக 10, 2024 06:56 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த அம்-மாசிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 70; மாற்றுத்திறனாளி.
இவர், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் உள்ள சர்ச்சில் மெழு-குவர்த்தி விற்பனை செய்து வந்தார். கொரோனா காலத்தில், சொந்த ஊருக்கு வந்த நாகராஜ், கடந்த ஜூனில், மீண்டும் கேரளா மாநிலம் வயநாடு சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லா-ததால், கடந்த, 20ல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சென்றார். அதன்பின், எங்களிடம் தொடர்புகொள்ள-வில்லை. தற்போது வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்-ளதால், இவரது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். நேற்று, மொளசி போலீசில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு, மனைவி சின்னம்மாள் புகாரளித்துள்ளார்.

