sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மழையுடன் துவங்கிய 'கத்தரி' வெயில் நாமக்கல்லில் 157 மி.மீ., பதிவால் மகிழ்ச்சி

/

மழையுடன் துவங்கிய 'கத்தரி' வெயில் நாமக்கல்லில் 157 மி.மீ., பதிவால் மகிழ்ச்சி

மழையுடன் துவங்கிய 'கத்தரி' வெயில் நாமக்கல்லில் 157 மி.மீ., பதிவால் மகிழ்ச்சி

மழையுடன் துவங்கிய 'கத்தரி' வெயில் நாமக்கல்லில் 157 மி.மீ., பதிவால் மகிழ்ச்சி


ADDED : மே 06, 2025 02:16 AM

Google News

ADDED : மே 06, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:

'அக்னி நட்சத்திரம்' தொடங்கிய முதல் நாளிலேயே கோடை மழை வெளுத்து கட்டியதால், நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில், 157 மி.மீ., மழை பதிவானது.

நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்தரி வெயில் துவங்கியது. வரும், 28 வரை நீடிக்கும் கத்தரி வெயில் காலத்தில், மழை பெய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, மாவட்டம் முழுவதும், ஒரு சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், மோகனுார், மணியங்காளிப்பட்டி, பேட்டப்பாளையம், எஸ்.வாழவந்தி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, 11:00 மணி முதல், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,ல்) வருமாறு: எருமப்பட்டி, 30, மோகனுார், 12, நாமக்கல், 32, ப.வேலுார், 44, புதுச்சத்திரம், 7, சேந்தமங்கலம், 7, கலெக்டர் அலுவலகம், 7.20, கொல்லி

மலை, 18 என, மொத்தம், 157.20 மி.மீ., மழை பதிவானது.






      Dinamalar
      Follow us