sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது

/

இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது

இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது

இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது


ADDED : ஜன 25, 2024 01:25 AM

Google News

ADDED : ஜன 25, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற பெயரில், சீதாராம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின், 30, என்பவர் பயிற்சி மையம் நடத்துகிறார். இங்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன், அப்பயிற்சி மையத்தில் படிக்க வந்த பெண்ணிடம், இவரது உறவுக்கார பெண்ணின் நடத்தை குறித்து அஸ்வின் அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை, அஸ்வினை சந்தித்து கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், அஸ்வினை பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

போலீசார், அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்தனர். அதில் சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், போனில் பேசிய பதிவுகள் இருந்தன.

இதையடுத்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகார்படி, திருச்செங்கோடு நகர போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஸ்வினை ஆஜர்படுத்தினர்.

நீதிபதி சுரேஷ்பாபு விசாரித்து, அஸ்வினை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us