sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்

/

மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்


ADDED : அக் 25, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரியம்மன் கோவிலில்

கம்பம் நடும் விழா கோலாகலம்

ராசிபுரம், அக். 25-

ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஐப்பசி மாத திருவிழா கடந்த செவ்வாய்கிழமை இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஊர் முக்கிய பிரமுகர்கள், கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று, பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூக்கூடைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து நித்திய சுமங்கலி மாரியம்மன் மேல் பூக்களை கொட்டி பூச்சாட்டினர்.

நேற்றிரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கம்பத்திற்கு மஞ்சள் பூசி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நவ., 4ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ல், கொடியேற்று விழா, 7 அதிகாலை, 4:00 மணிக்கு தீ மிதிக்கும் நிகழ்ச்சி, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி சப்தாபரணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us