sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்

/

சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்

சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்

சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்


ADDED : நவ 03, 2024 02:28 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வழக்க-மாக தொழிலாளர்களுக்கு, தீபாவளி விடுமுறை, 3 நாட்கள் அளிக்கப்படும். ஆனால், தற்போது தீபாவளி பண்டிகைக்கு உற்-பத்தி செய்த துணிகள் அதிகளவில் விற்பனையின்றி தேக்கம-டைந்துவிட்டன. இதனால், தீபாவளி பண்டிகைக்கு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து, 10 நாட்கள் விடுமுறை அளிக்-கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

எப்போதும் பரபரப்பாகவும், தறி சத்தமாகவும் ஒலித்த பள்ளிப்-பாளையம் பகுதியில், ராஜவீதி, ஆர்.எஸ்.சாலை, காந்திபுரம் வீதி, காவேரி, வசந்த நகர், ஆவாரங்காடு, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் ஆள் நட-மாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. விசைத்தறி கூடங்க-ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் அதிகளவு நடைபெறாது என்பதால், ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உள்பட பல கடைகள் மூடப்பட்டுள்ளன்.






      Dinamalar
      Follow us