/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்
/
சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்
சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்
சொந்த ஊர் சென்ற தொழிலாளர் வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்
ADDED : நவ 03, 2024 02:28 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வழக்க-மாக தொழிலாளர்களுக்கு, தீபாவளி விடுமுறை, 3 நாட்கள் அளிக்கப்படும். ஆனால், தற்போது தீபாவளி பண்டிகைக்கு உற்-பத்தி செய்த துணிகள் அதிகளவில் விற்பனையின்றி தேக்கம-டைந்துவிட்டன. இதனால், தீபாவளி பண்டிகைக்கு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து, 10 நாட்கள் விடுமுறை அளிக்-கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
எப்போதும் பரபரப்பாகவும், தறி சத்தமாகவும் ஒலித்த பள்ளிப்-பாளையம் பகுதியில், ராஜவீதி, ஆர்.எஸ்.சாலை, காந்திபுரம் வீதி, காவேரி, வசந்த நகர், ஆவாரங்காடு, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் ஆள் நட-மாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. விசைத்தறி கூடங்க-ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் அதிகளவு நடைபெறாது என்பதால், ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உள்பட பல கடைகள் மூடப்பட்டுள்ளன்.