sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

/

மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்


ADDED : நவ 06, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், வெண்ணந்துார், ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி தேர் திருவிழா, அக்., 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 23ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது.

நேற்று அதிகாலை, அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தீமிதி விழா துவங்கியது. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அலகு குத்திக்கொண்டும், குழந்தைகளை துாக்கி கொண்டும், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு, சக்தி அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாலை, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சத்தாபரணத்துடன் விழா, நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us