sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

/

சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 06, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில் இருந்து கோம்பைக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி விவசாயிகள், கொல்லிமலை அடிவார பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளதாகவும், இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பின், சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

இதனால், இப்பகுதியில் செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்; குடிநீர், மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பொன்னேரி கைகாட்டியில், நேற்று முன்தினம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்றும் 2வது நாளாக இப்பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை, குடிநீர், மின் விளக்கு வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ததுடன், மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us