நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
6 பவுன் நகை திருட்டு
எருமப்பட்டி, நவ. 7-
எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் சாரதா, 60. இவர் கடந்த, 26ல் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து சாரதா கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் ஆண் சடலம்
குமாரபாளையம், நவ. 7-
குமாரபாளையம் காவிரி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, வருவாய்த்துறையினருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., அரசு, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.