/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைரவநாதமூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
பைரவநாதமூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : நவ 24, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைரவநாதமூர்த்தி கோவிலில்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
மல்லசமுத்திரம், நவ. 24-
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பைரவநாதமூர்த்தி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு யாகம், பூஜை நடந்தது.
கடன் பிரச்னை, குடும்ப பிரச்னை தீர, பக்தர்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வழிபட்டனர். பலவகையான வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.