/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எங்கள் தொழிலிலும் போட்டி உண்டு' ஹரியானா கொள்ளையர் வாக்குமூலம்
/
'எங்கள் தொழிலிலும் போட்டி உண்டு' ஹரியானா கொள்ளையர் வாக்குமூலம்
'எங்கள் தொழிலிலும் போட்டி உண்டு' ஹரியானா கொள்ளையர் வாக்குமூலம்
'எங்கள் தொழிலிலும் போட்டி உண்டு' ஹரியானா கொள்ளையர் வாக்குமூலம்
ADDED : செப் 29, 2024 03:11 AM
திருச்சூரில் ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்டம், வெப்-படை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நாங்கள் பணத்துக்காக நிறைய கஷ்டப்பட்டோம். இதற்கு ஒரே வழி, வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை அடிப்பது தான் என்று முடிவெடுத்தோம். அதற்கு ஒரு கார் வாங்கினோம்; அந்த காருக்கான பணத்தை அனைவரும் முத-லீடாக போட்டோம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வங்கி ஏ.டி.எம்., கொள்ளையை துவங்கி விட்டோம். முதலில் வடமாநிலங்களில் துவங்கினோம். எங்களை போலவே, பல குழுக்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவது தெரிந்தது. அதனால், தொழில் போட்டி ஏற்பட்டது. உடன், எங்களின் கவனம் தென் மாநிலங்களை நோக்கித் திரும்பியது.
மூன்று மாதத்துக்கு முன் ஆந்திராவுக்கு சென்றோம். அங்கி-ருக்கும் வங்கிகளை, காரில் சென்று நோட்டமிட்டோம். எங்க-ளுக்கு தோதாக இருந்தால் மட்டுமே கொள்ளை அடிப்போம். டிரைவருடன் காரில் சென்று ஏ.டி.எம்., பகுதிகளில் இறங்கி கொள்வோம். ஒரு குறிப்பிட்ட துாரத்தில் கார் நிறுத்தப்பட்டி-ருக்கும். கார் டிரைவர், அந்தப் பகுதியை நோட்டமிட்டபடி இருப்பார்.
மூன்று பேர், ஏ.டி.எம்., இயந்திரம் இருக்கும் பகுதிக்குள் நுழைவர். உள்ளே சென்றதும், அங்கிருக்கும் சி.சி.டி.வி., கேமரா மீது, 'ஸ்பிரே பெயின்ட்' அடித்து, செயல்பட விடாமல் செய்து விடுவோம். 'காஸ் வெல்டிங்' கருவியை வைத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்வோம்.
கொள்ளையில் ஈடுபடும் போது, இதுவரை யாரும் எங்களை குறுக்கிட்டதில்லை. அதனால், நாங்கள் போட்ட திட்டப்படி, பல கோடிகளை கொள்ளை அடித்தோம். ஒரு ஊருக்கு சென்று, அங்கிருக்கும் ஏ.டி.எம்., இயந்திரங்களை நோட்டமிட்ட பின், அந்த ஊருக்கு ஏற்றபடி கார் பதிவு எண்ணை மாற்றி விடுவோம். அதனால், கிட்டதட்ட உள்ளூர் கார் போலவே இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராது.
ஒரு ஊரில் கொள்ளையில் ஈடுபட்டு விட்டால், அங்கே இருக்கும் மற்ற ஏ.டி.எம்., நோக்கி செல்ல மாட்டோம். அங்கிருந்து குறைந்-தது, 500 கி.மீ., தொலைவுக்கு சென்று, அங்கிருக்கும் ஏ.டி.எம்., மையத்தில் தான் கொள்ளையடிப்போம்.
கன்டெய்னர் லாரி ஏன்?
தமிழகத்துக்கு பின், கேரளாவுக்குச் சென்றோம். திருச்சூர் மாவட்டம் கோலழி பகுதியில் இருக்கும் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மிஷினை உடைத்தோம். எளிதாக வேலையை முடித்-ததால், அங்கேயே தொடர விரும்பி, இரண்டாவதாக திருச்சூர் நகர் சொரணூர் சாலையில் உள்ள ஏ.டி.எம்.,மில் கொள்ளைய-டித்தோம். திருச்சூருக்கு அருகில் உள்ள இருஞ்சாலக்குடி மாம்ப-ரணம் பகுதியிலும் கொள்ளையடித்தோம்.
கொள்ளையடித்தப் பணம் ஐம்பது லட்சம் ரூபாயை தாண்டி விட்டது. அதை பாதுகாப்பாக, ஹரியானாவுக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்பதற்காக, கன்டெய்னர் லாரியை பயன்படுத்தினோம். திருச்சூரை சுற்றியே அடுத்தடுத்து மூன்று ஏ.டி.எம்., கொள்ளை நடத்தப்பட்டதால், போலீசார் உஷாராகி விட்டனர். அதை உணர்ந்து தான், கன்டெய்னர் லாரியில் காரையும் பணத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். எப்ப-டியோ விஷயம் கசிந்து விட்டது. திருச்சூர் போலீசார், தமிழக போலீசாரை உஷார்படுத்தி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்
- நமது நிருபர் -.