/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
ADDED : செப் 30, 2025 01:07 AM
ராசிபுரம், 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திருக்குறள் திட்டத்தின், 6வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. எலச்சிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், பயிற்சியளித்தார்.
சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி மகாலிங்கம், மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளரும், பள்ளி துணை ஆய்வாளருமான பெரியசாமி தலைமை வகித்தார்.தமிழ் கழகத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி, முதன்மை கருத்தாளராக திருக்குறளின் மேன்மை குறித்தும், தீவினையெச்சம் புறங்
கூறாமை குறித்து கதைகள் வாயிலாகவும் செயல்பாட்டின் வாயிலாகவும் அறிமுகம் செய்தார். தமிழ் சங்கத்தின் பொருளாளர் ரீகன், இணைச்செயலாளர் இருசப்பன், தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.