/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி
/
ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி
ADDED : டிச 14, 2025 08:28 AM

ராசிபுரம்: ராசிபுரம் தமிழ் கழகம் சாபில், திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், 17வது வார திருக்-குறள் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் பாரதி வரவேற்றார்.
ராசிபுரம் தமிழ் கழக செயலாளரும், பள்ளி துணை ஆய்-வாளருமான பெரியசாமி தலைமை வகித்தார்.நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், 50 அதி-காரங்களை மனப்பாடம் செய்த, 2 மாணவிக-ளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, கழக தலைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.பயிற்சியில் காலமறிதல், தெரிந்து தெளிதல் ஆகிய அதிகாரங்களை கருத்தாளர்கள் பாடல், ஆடல் மற்றும் கதைகள்
மூலம் விளக்கினர். மாணவிகள் உற்சாகத்துடன்திருக்குறளை கற்-றனர்.முடிவில் பொருளாளர் ரீகன் நன்றி கூறினார்.

