sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்

/

சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்

சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்

சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்


ADDED : ஜூன் 04, 2025 01:54 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு, நேற்று வெப்படை போலீஸ் ஸ்டேஷன் சார்பில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், 2022ல், படவீடு பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி விக்னேஸ்வரன், 26, என்பவரை கவின்குமார், 24, அரவிந்தராஜ், 27, ஹரிதாஸ், 27, ஆகிய மூவரும் அடித்து பணம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹரிதாஸ் தவிர மற்ற இருவரும், ஜாமினில் வெளியே வந்தனர். கிளை சிறையில் இருந்த ஹரிதாஸ் என்பவரை, வெப்படை போலீசார் நேற்று, குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு வழக்கு விசாரணைக்கு வந்த ஹரிதாஸ், விக்னேஸ்வரனை பார்த்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நீதிபதியிடம், விக்னேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குமாரபாளையம் போலீசாரை வரவழைத்து, ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us