sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

/

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

55


UPDATED : டிச 19, 2025 02:03 PM

ADDED : டிச 19, 2025 11:24 AM

Google News

55

UPDATED : டிச 19, 2025 02:03 PM ADDED : டிச 19, 2025 11:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதியான முருக பக்தர் பூர்ணசந்திரன் 40, மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

அவரது உடலை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

பூர்ண சந்திரன் மரணத்துக்கு, பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பிறகு கூறியதாவது:

பூர்ண சந்திரனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. நேற்று முதல் இந்த துக்கம் தமிழர்களின் தொண்டையை அடைக்கிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர தர்மத்திற்காக இறக்கக்கூடாது. அதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, என்றார்.Image 1510269

மனைவி கண்ணீர்!

இறந்த பூர்ண சந்திரன் மனைவி இந்துமதி, ''ஆண்டுதோறும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றினார்களே, இந்த முறை தீபம் தீபத்தூணில் ஏற்றவில்லையே என்று கணவர் பூர்ண சந்திரன் புலம்பி வந்தார். அவர் சிவ பக்தர். மாதம் 3 முறை சதுரகிரி மலை சென்று வந்தார்,'' என கண்ணீருடன் தெரிவித்தார். இந்துமதிக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆறுதல் கூறினார்.



ரூ.1 கோடி வழங்கணும்!

இறந்த பூர்ண சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பை அவமதித்து அதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசால் மனவேதனை அடைந்து மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இன்று அமாவாசை நாளில் பூரண சந்திரன் மறைந்து விட்டார். இதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. அதுபோல பூரணசந்திரன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது மனைவி இந்துமதிக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். ஹிந்து முன்னணி, பாஜ சார்பில் பூரண சந்திரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது அவருடன் காடேஸ்வரா சுப்ரமணியன் உடன் இருந்தார்.








      Dinamalar
      Follow us