sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாளை முதுகலை ஆசிரியர் பணி தேர்வு 400 'சிசிடிவி' கேமராக்களில் கண்காணிப்பு

/

நாளை முதுகலை ஆசிரியர் பணி தேர்வு 400 'சிசிடிவி' கேமராக்களில் கண்காணிப்பு

நாளை முதுகலை ஆசிரியர் பணி தேர்வு 400 'சிசிடிவி' கேமராக்களில் கண்காணிப்பு

நாளை முதுகலை ஆசிரியர் பணி தேர்வு 400 'சிசிடிவி' கேமராக்களில் கண்காணிப்பு


ADDED : அக் 11, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு, நாளை காலை, 9:30 மணிக்கு நடக்க உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 30 மையங்களில், 8,193 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். இதில், 98 மாற்றுத்திறனாளிகள், 15 பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். தேர்வுக்கு வருவோர், காலை, 8:30 மணி முதல், 9:30 மணி வரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அதன்பின் வருவோருக்கு அனுமதியில்லை.

தேர்வில் காப்பி அடிப்பது; இதர விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவதை கண்டறியவும், தடுக்கவும், 30 மையங்களிலும், 400 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் தேர்வு நடைபெறுவதற்கு உதவ வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். வழிகாட்டி விபரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us