/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : நவ 10, 2025 01:49 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, தமிழகத்தின் சுற்-றுலா தலமாக விளங்குகிறது. இங்கு, தமிழகம், ஆந்திரா, கர்நா-டகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள-மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறையால், கொல்லிமலைக்கு சுற்றுலா பய-ணிகள் அதிகளவில் வந்திருந்தனர். தற்போது, கொல்லிமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை, பனிப்பொழிவு மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கொல்லி-மலை முழுவதும் சாரல் மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் குதுாகலமடைந்துள்ளனர்.
தொடர் மழை எதிரொலியால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி மற்றும் சிற்றரு-வியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதேபோல், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்தபடி, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

