/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராவல் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
/
கிராவல் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 19, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராவல் மண் எடுத்த
டிராக்டர் பறிமுதல்
எருமப்பட்டி, நவ. 19-எருமப்பட்டி யூனியன், செந்வந்திப்பட்டியில் அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுப்பதாக, வி.ஏ.ஓ., சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வருவாய்த்துறையினர், போலீசார், கிராவல் மண் வெட்டி எடுத்து செல்ல முயன்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். அப்போது, அங்கிருந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.