sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி


ADDED : மே 11, 2025 01:12 AM

Google News

ADDED : மே 11, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் முதல் கட்டமாக, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத, 12,889 கற்போர்களை கண்டறிந்தனர்.

அவர்களுக்கு, 901 எழுத்தறிவு மையங்களில், 897 தன்னார்வலர்களின் உதவியுடன் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இத்தன்னார்வலர்களுக்கான பாடப்பொருள் சார்ந்த ஒரு நாள் பயிற்சி, எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனுார் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் நடத்தப்பட்டது.

மல்லசமுத்திரம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை வட்டார வளமையங்களில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து முன்னிலை வகித்தார். இப்பயிற்சியை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் குமார் ஆய்வு செய்தார். இப்பயிற்சியில், 241 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us