/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அட்மா' திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
'அட்மா' திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : பிப் 29, 2024 01:15 AM
பள்ளிப்பாளையம்,
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில், 'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு, 'கிசான் கோஸ்திஸ்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம், நேற்று முன்தினம்நடந்தது. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தமிழ், நெற் பயிருக்கான நடவுப்பணி முதல் அறுவடை பணி வரை பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இதையடுத்து, பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள மானிய திட்டங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி, வேளாண்மை அலுவலர் ரஞ்சித்ராஜ் ஆகியோர் தெளிவாக எடுத்துக்கூறினர். தொடர்ந்து, துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி, பூச்சிக்கொல்லி மருந்துகள், உயிரி உரங்கள் மற்றும் திரவ உயிரி உரங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சி முகாமில், சமயசங்கிலி பகுதி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நிஷா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

