/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் - ஆத்துார் சாலையில் மரங்கள் கணக்கெடுப்பு
/
ராசிபுரம் - ஆத்துார் சாலையில் மரங்கள் கணக்கெடுப்பு
ராசிபுரம் - ஆத்துார் சாலையில் மரங்கள் கணக்கெடுப்பு
ராசிபுரம் - ஆத்துார் சாலையில் மரங்கள் கணக்கெடுப்பு
ADDED : டிச 07, 2024 06:56 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் - ஆத்துார் சாலையில், விபத்துக்கு வழிவகுக்கும் இடை-யூறு மரங்களை அகற்ற, வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை-யினர் ஆய்வு செய்து கணக்கெடுத்தனர்.
ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் வழியில், காக்காவேரி உள்ளது. அதிக வளைவுகள் உள்ள இப்பகுதியில், காக்கவேரிக்கு முன் மற்றும் காக்காவேரிக்கு அடுத்துள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள்
நேர்கின்றன. சராசரியாக மாதத்-திற்கு, 2 பேர் விபத்தில் இறக்கும் அளவிற்கு விபத்துகள் பதி-வாகி வருகின்றன.இந்நிலையில், காக்காவேரி வளைவு சாலைகளில் உள்ள புளியம-ரங்கள் மறைத்துக்கொள்வதால் விபத்து ஏற்படுவது கண்டறியப்பட்டது.விபத்துகளை தவிர்க்க, சாலையின் வளைவு விளிம்பில் பார்-வைக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட
பரிந்துரைக்கப்-பட்டது.இதையடுத்து, இடையூறு மரங்களை அகற்றுவது குறித்து நெடுஞ்-சாலைத்துறை, வனத்துறையினர் கூட்டாக, நேற்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வளைவில் இடையூறாக உள்ள மரங்களை அளவீடு செய்து, முழுவதுமாக அகற்ற வேண்டிய மரங்கள்,
கிளைகள் மட்டும் அகற்ற வேண்டிய மரங்களை வகைப்பாடு செய்தனர்.