/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி
/
தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி
ADDED : டிச 28, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின், முதலாமாண்டு நினைவஞ்சலியையொட்டி, நாமக்கல் மாநகர மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், அண்ணாதுரை சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு நினை-வேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், நிர்வா-கிகள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அதில், விஜயகாந்தின் உருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் துாவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தே.மு.தி.க.,வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.