ADDED : டிச 28, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பத்தாண்டு கால பிரதம-ராக இருந்தவர் மன்மோகன் சிங், 92; இவர், உடல்நலக்கு-றைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார்.
அவரது மறை-வுக்கு, நாடுமுழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி-யினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்-டுள்ள அவரது உருவ படத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமையிலான கட்சியினர் மலரஞ்சலி செலுத்-தினர். அதில், மாவட்ட முன்னாள் தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

