sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை

/

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை


ADDED : ஜூலை 07, 2025 03:28 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல், மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 56; வட்டார போக்குவரத்து அலுவலராக திருச்சியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, 51; மோகனுார் ஒன்றிய ஆண்டாபுரம் பஞ்., துவக்கப்பள்ளி ஆசிரியை. இந்த தம்பதியின் மகள் சம்யுக்தா, 25; வெளிநாட்டில் எம்.பி.ஏ., படித்து முடித்துள்ளார். மகன் ஆதித்யா, 21; எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார்.

நேற்று அதிகாலை, சுப்ரமணியன், பிரமிளா, நாமக்கல் - மோகனுார் சாலையில் வகுரம்பட்டி அருகே ரயில் பாதையில், சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சுப்ரமணியன் தலை துண்டிக்கப்பட்டும், பிரமிளா உடல் சிதைந்தும் பலியாகினர். சேலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில்வே போலீசார் கூறுகையில், 'சம்யுக்தா ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us