ADDED : நவ 28, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறையாத
குண்டுமல்லி விலை
எருமப்பட்டி, நவ. 28-
எருமப்பட்டி யூனியனில் பவித்திரம், நவலடிப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் குண்டு மல்லிகை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.எருமப்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து மழை பெய்து வருவதால், குண்டுமல்லி செடிகளில் பூக்கள் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால், விசேஷ தினங்கள் இல்லாத நாளில் ஒருகிலோ குண்டுமல்லி, 250 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, வரத்து குறைந்ததால், ஒருகிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.