sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்

/

மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்

மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்

மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்


ADDED : நவ 19, 2024 01:33 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நவ. 19-

'நாமக்கல்லில், வரும், 27ல், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது' என, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட மதுவிலக்கு குற்றத்தில், ஒரு நான்கு சக்கர வாகனம், 24 டூவீலர்கள் என, மொத்தம், 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், வரும், 27 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்,

எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி., தன்ராசு ஆகியோர் முன்னிலையில், பொது ஏலத்தில் விடப்படும்.

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர், வரும், 26 காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில், வாகனங்களை பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், 27 காலை, 9:00 மணிக்கு, 5,000 ரூபாய் முன்பணமாக, நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி., வரி முழுமையாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள

வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us