sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காங்கேயம், தாராபுரத்தில் வேல் வழிபாடு

/

காங்கேயம், தாராபுரத்தில் வேல் வழிபாடு

காங்கேயம், தாராபுரத்தில் வேல் வழிபாடு

காங்கேயம், தாராபுரத்தில் வேல் வழிபாடு


ADDED : டிச 04, 2024 02:06 AM

Google News

ADDED : டிச 04, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், டிச. 4-

காங்கேயம் மற்றும் தாராபுரத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வேலுக்கு, நுாற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்து முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடக்கிறது. இதற்கான வேல், கொங்கு மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு, வாகனத்தில் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் காங்கேயத்துக்கு நேற்று காலை ஊர்வலமாக சென்ற வேலுக்கு, பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் கோவிலில், இந்து முன்னணி இயக்க மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், வேல் வழிபாடு நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள், வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, தீபாராதணை காட்டி வழிபட்டனர்.

இதேபோல் தாராபுரம் வந்த வேல் ரதத்துக்கு, திரளான பெண்கள் வரவேற்பு அளித்தனர். இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் கதிரேசன் முன்னிலையில் நடந்த நிகழ்வில், இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், வேல் வழிபாடு குறித்து விளக்கமாக பேசினார். இதேபோல் தென்தாரையில் நடந்த வேல் வழிபாட்டில், பா.ஜ., மாவட்ட நிர்வாகி ராஜா கோவிந்தசாமி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி சங்கிலித்துரை உள்பட, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us