/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்
/
வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்
வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்
வாக்காளர் திருத்தம் புதியது அல்ல பா.ஜ., துணைத்தலைவர் தகவல்
ADDED : டிச 29, 2025 07:17 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் பகுதியில், பா.ஜ., சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டா-டப்பட்டது.
விழாவில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி கலந்துகொண்டு, வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்-பட்டது. பின், அங்கு நடந்துவரும் வாக்காளர் பட்-டியல் சிறப்பு திருத்த முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து, மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், துரைசாமி பேசுகையில், ''மத்திய அரசின் திட்டமான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 446 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கி-யுள்ளது. அதனை பெற்ற மாநில அரசு, தற்போது, 846 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்-டத்தை செயல்படுத்தி வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி தற்போதுதான் செயல்படுத்தப்படுகிறது என, தமிழக முதல்வர் நினைத்துக்கொண்டிருக்-கிறார். ஆனால், இது முதல்முறை அல்ல. நாடு குடியரசு ஆனது முதல் இது, 12வது முறையாக இப்பணி நடந்து வருகிறது,'' என்றார்.

