/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : டிச 29, 2025 07:16 AM

நாமக்கல்: நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உடல் உறுப்பு தானம் மற்றும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்-படுத்தும் வகையில், சர்வம் கல்வி அறக்கட்-டளை, மக்களோடு நாம் இயக்கம் சார்பில், நற்-சிந்தனை மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடந்-தது.
சர்வம் அறக்கட்டளை தலைவர் ரம்யா தலைமை வகித்தார். இதில், 7 கி.மீ., 5 கி.மீ., 4 கி.மீ., 2 கி.மீ., என, 8 பிரிவுகளில் போட்டி நடத்தப்-பட்டது. 12 வயது முதல், 40 வயது வரை, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உடல் உறுப்பு தானம் குறித்தும் போதை பொருளுக்கு எதிராக சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவு குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சீருடை-களை அணிந்து ஓடினர்.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 7,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசு, 3,000 ரூபாயும், 4 முதல் 10 வரையில் வெற்றி பெற்றவர்களுக்கு, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

