/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகர தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
மாநகர தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 25, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லுாரி முன், மாநகர தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவியருக்கு நீர்மோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.