/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : டிச 03, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், டிச. 2-
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, ராசிபுரத்தில், 6ம் ஆண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் நகர வளர்ச்சிக்குழு தலைவர் பாலு, ராசிபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள், மருத்துவ காப்பீடு அட்டை, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், குறித்தும் விளக்கமாக கூறப்பட்டது. முடிவில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டன.