/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : ஆக 31, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம்,
வட்டமலை, ஜோதி நகரை சேர்ந்தவர் கதிர்வேல், 28; சரக்கு வாகன டிரைவர்.
இவரது மனைவி ரம்யா, 24. தம்பதியருக்கு, ஐந்து வயதில் யோகமித்ரன் என்ற
மகன் உள்ளார்.
கடந்த, 23ல் கதிர்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
மனைவி, மகன் வீட்டில் இருந்தனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு
வந்தபோது மனைவி, மகனை காணவில்லை. உறவினர் வீட்டில் விசாரித்தும் எந்த
தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, குமாரபாளையம் போலீசில்
கதிர்வேல் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் காணாமல் போன ரம்யா
மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.