ADDED : நவ 20, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் அடுத்த திண்டமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி, 23; இவருக்கும், பேளுக்குறிச்சியை சேர்ந்த மோகனராஜ் என்பவருக்கும், ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு, இனியன் என்ற மகன் உள்ளார். கடந்த, 2ல், திண்டமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கலைச்செல்வி சென்றுள்ளார்.
அப்போது, இரவு வீட்டில் வாட்டர் கேனில் கலந்து வைத்திருந்த, செடிகளுக்கு அடிக்கும் மருந்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். நல்லி
பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

