sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்

/

பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்

பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்

பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்


ADDED : ஜன 02, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ஜன. 2-

''பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, அரசுத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, கருத்தரங்கில், கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது.

இக்கருத்தரங்கமானது, மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் உள்ள வட்டாரம், சமுதாய பயிற்றுனர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு, வரும், 7 வரை நடக்கிறது.

இந்த கருத்தரங்கை முழுமையாக பயன்படுத்தி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 3 ஆண்டுகளில், 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2024-ல், 74 ஆக குழந்தை திருமணம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us