ADDED : மே 17, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், மொளசி பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியபோது, விஷ வண்டு கடித்து ஒடிசா தொழிலாளி பலியானார்.
ஒடிசாவை சேர்ந்தவர் சுரேந்திராமஜி, 30; இவர், ஈரோடு அருகே, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் வேலை செய்து வந்தார். தேங்காய் குடோன் உரிமையாளர், பள்ளிப்பாளையம் அருகே, மொளசி காட்டுவேலாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, இந்த தென்னந்தோப்பில், சுரேந்திராமஜி தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது, தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்துவிட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுரேந்திராமஜி உயிரிழந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.