/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலி
/
தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : செப் 03, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் குமாரபாளையம் அருகே, குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னுசாமி, 44; மரம் ஏறும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், நேற்று காலை சின்னுசாமி இறந்தார். அவரது மனைவி சுமதி, 43, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.