/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ் துாக்கி வீசியதில் லாரி ஏறி தொழிலாளி பலி
/
அரசு பஸ் துாக்கி வீசியதில் லாரி ஏறி தொழிலாளி பலி
ADDED : நவ 05, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், 48; விசைத்தறி தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம், 11:40 மணிக்கு, பல்லக்காபாளையம், செங்கமா முனியப்பன் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, 'பல்சர்' டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பல்லக்காபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில், சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த அரசு சொகுசு பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சுந்தரம் மீது லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

