sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்


ADDED : ஜூன் 17, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சங்ககிரி அருகில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி, வெள்ளாளபாளையம், காவேரிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 47, கரும்பு வெட்டும் தொழிலாளி, இவர் கடந்த, 2023 ஜூலை, 10ல், ஆத்தங்கரை பகுதிக்கு வந்த, 4 வயது சிறுவனை, சாக்லேட் வாங்கி தருவதாக டூவீலரில் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதில் படுகாயமடைந்த சிறுவனை, அதே பகுதியில் விட்டு விட்டு, ஓட்டம் பிடித்தார்.

அவ்வழியே சென்றவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், தேவூர் போலீசார், லட்சுமணனை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், போக்சோ பிரிவின் கீழ், லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கடத்தி சென்ற பிரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தனித்தனியே அனுபவிக்க, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்






      Dinamalar
      Follow us