sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு

/

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு


ADDED : நவ 07, 2025 12:52 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல், காந்தி நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று ஐப்பசி கிருத்திகை பூஜை விமர்சையாக நடந்தது. கணபதி, சுப்ரமணியர் பூஜையை தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது. மதியம் வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.

* நாமக்கல், சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணிக்கு பல்வேறு அபி ேஷகம் செய்யப்பட்டு, சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* நாமக்கல் ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டிவர் கோவில், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கருங்கல்பாளையம், கரையான்புதுார் கருமலை, தண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு திருநீற்று அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

* ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்உள்ள சுப்ரமணியருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

* சேந்தமங்கலம் பிரதான சாலையில், மலைமீது அமைந்துள்ள தத்தகிரி முருகனுக்கு பால், தேன், தயிர் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

* சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us