/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சரக்கு ஆட்டோ மோதி விபத்து: இளைஞர் பலி
/
சரக்கு ஆட்டோ மோதி விபத்து: இளைஞர் பலி
ADDED : ஆக 24, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரையை சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் தினேஷ்குமார், 22; மினி பஸ் கண்டக்டர்.நேற்று முன்தினம் மாலை, தன் இருசக்கர வாகனத்தில் கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறு கிணத்துப்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் தினேஷ்குமார் படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷ்குமார் இறந்தார். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள சரக்கு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.