/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது
/
ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது
ADDED : மே 02, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டி ராஜவீதியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், 27; பிட்டர் வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நேற்று டூவீலர், லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரபுரத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருடை டூவீலரையும், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் லேப்டாப்பை திருடி வந்ததும் தெரியவந்தது. ராசிபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.