/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்
/
வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்
வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்
வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்
ADDED : செப் 06, 2011 12:18 AM
ஊட்டி: 'கேர்ன்ஹில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை வனத்துறை மீட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க கூட்டம் நடந்தது. கேர்ன்ஹில் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியை மீண்டும் சர்வே செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும்; கின்னஸ் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்; கலப்பட தேயிலைதூள் சோதனையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்கள் காவல்துறை நல்லுறவு கூட்டங்கள் நடத்த வேண்டும்; சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே முனீஸ்வரர் கோவில் நடைபாதை சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார். இணை செயலாளர் பிரபு நன்றி கூறினார்.