sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு

/

நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு

நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு

நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு


ADDED : ஜூலை 17, 2011 01:27 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : 'நீலகிரி விவசாயிகளுக்கு 512 மெட்ரிக் டன் 'டிஏபி' உரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில வேளாண்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்ட வேளாண் பயிர்களான உருளைக்கிழங்கு, மலை காய்கறிகள், தேயிலை ஆகியவற்றுக்கு கலப்பு மற்றும் தனி உரமாகவும், பயிர்களுக்கு மேல் மற்றும் அடி உரமாகவும் 'டிஏபி' உரம் இடப்படுகிறது.

இதனால் மகசூல் பெருகுகிறது. டிஏபி உரம் வினியோகம் வெறும் 20 டன்னாக மட்டும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது மிக குறைவாக உள்ளது.



இரண்டாம் போக பயிர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான 145 மெட்ரிக் டன்னுக்கு, வெறும் 20 டன் மட்டும் அனுமதித்துள்ளது விவசாயிகளை பாதிக்க செய்துள்ளது. எனவே, மகசூல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அரசு ஒதுக்கி வரும் டிஏபி உரத்தை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். இரண்டாம் போகம் பயிர் சாகுபடிக்கு உரம் தேவையாக இருப்பதாலும், மழை காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 512 மெட்ரிக் டன் டிஏபி உரம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.










      Dinamalar
      Follow us