sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உலக நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை

/

உலக நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை

உலக நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை

உலக நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை


ADDED : ஆக 26, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:உலக நலன் வேண்டி, பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது.

பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், உலக நலன் வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அகில பாரதிய சன்யாசி சங்கத்தின் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ் ஆசி வழங்கி பேசுகையில்,வேற்றுமைகளை களைந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவும், உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை நடக்கிறது. தீப ஒளி இருளை அகற்றி, ஒளியை தருகிறதோ, அதைப்போல, மக்கள் தங்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி, ஒளியை ஏற்றவேண்டும். கூட்டு பிரார்த்தனை அதிக பலன் தரும். அதனால், அனைவரும் உலக நன்மையை வேண்டி பிரார்த்தனை செய்வோம், என்றார். ஆசிரம தலைவர் சுவாமினி சிவ ஞானப்பிரியா ஆசியுரை வழங்கினார். திருவிளக்குகளுக்கு, குங்குமம், புஷ்பத்தால், பெண்கள் அர்ச்சனை செய்தனர். தீபம் காட்டி வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us