/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் 28 சதவீதம் தேக்கம்
/
தேயிலை ஏலத்தில் 28 சதவீதம் தேக்கம்
ADDED : மார் 24, 2024 11:43 PM
குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் சராசரி விலை உயர்ந்த போதும், 28 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்தது ; கடந்த வாரத்தை விட, 5.70 கோடி ரூபாய் மொத்த வருமானமும் சரிந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 12வது ஏலத்தில், '10.74 லட்சம் கிலோ இலை ரகம், 3.61 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 14.35 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
'7.31 லட்சம் கிலோ இலை ரகம், 3.02 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 10.33 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்றது. சராசரி விலை கிலோவுக்கு, 103.44 ரூபாயாக இருந்தது. 10.69 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த, 11வது ஏலத்தை விட, இந்த ஏலத்தில் 1.78 லட்சம் கிலோ வரத்து குறைந்தது; 4.25 லட்சம் விற்பனையும் சரிந்தது.
ஏலத்தில் சராசரி விலை உயர்ந்த போதும், 28 சதவீத தேயிலை துாள் தேக்கமடைந்தது; கடந்த வாரத்தைவிட, 5.70 கோடி ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது. ஒரு கிலோ தேயிலை துாள் சராசரி விலை, 103.44 என இருந்தது. கிலோவுக்கு, 2 ரூபாய் ஏற்றம் கண்டது. இதனால், தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழக்கும் பசுந்தேயிலை துாளுக்கு மாதாந்திர நிர்ணயம் செய்யும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

