/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த குட்டி யானை; சிகிச்சைக்கு பின் வன ஊழியர்களை துரத்தியதால் பரபரப்பு
/
உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த குட்டி யானை; சிகிச்சைக்கு பின் வன ஊழியர்களை துரத்தியதால் பரபரப்பு
உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த குட்டி யானை; சிகிச்சைக்கு பின் வன ஊழியர்களை துரத்தியதால் பரபரப்பு
உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த குட்டி யானை; சிகிச்சைக்கு பின் வன ஊழியர்களை துரத்தியதால் பரபரப்பு
ADDED : ஏப் 05, 2024 10:27 PM

கூடலுார் : முதுமலை, மசினகுடி அருகே, தனியார் இடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்த குட்டி யானை, சிகிச்சைக்கு பின் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச் சரகத்துக்கு உட்பட்ட தனியார் இடத்தில், நேற்று, காலை, 8 வயதுடைய குட்டி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது.
மசினகுடி, துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் ஜான் பீட்டர், வனவர் சங்கர், வன ஊழியர்கள் அதன் உடலை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், யானையின் உடல் நிலையை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அதன் உடலில் நீர் சத்து குறைபாடு மற்றும் வயிற்றில் புழுக்கள் இருப்பது தெரிய வந்தது. 'தெர்மல் இமேஜ் கேமரா' மூலம் உடலினுள் காயம், எலும்பு முறிவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில், எந்த பாதிப்பும் இல்லை, என, தெரிய வந்தது.
தொடர்ந்து, சிகிச்சை அளித்தனர். மேலும், உடலின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக கூடலுாருக்கு அனுப்பப்பட்டது. யானையை நிற்க வைப்பதற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை வரவழைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், இரண்டு மணி நேரம் சிகிச்சைக்கு பின், யானையின் உடல்நிலையில் தேர்ச்சி ஏற்பட்டது.
பகல், 12:00 மணிக்கு வன ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சியில், குட்டி யானை எழுந்து நின்றவுடன், வன ஊழியர்களை திடீரென விரட்டியது. வனத்துறையினர் ஓடி தப்பினர். சிறிது துாரம் அவர்களை துரத்திய குட்டியானை, திரும்பி வனப்பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மயங்கி கிடந்த குட்டி யானைக்கு உடனடியாக, சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின், யானை எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் நடமாட்டத்தையும், உடல்நிலையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.

