/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் காட்டெருமை முட்டியதில் வன ஊழியர் காயம்
/
முதுமலையில் காட்டெருமை முட்டியதில் வன ஊழியர் காயம்
முதுமலையில் காட்டெருமை முட்டியதில் வன ஊழியர் காயம்
முதுமலையில் காட்டெருமை முட்டியதில் வன ஊழியர் காயம்
ADDED : மார் 22, 2024 10:04 PM

கூடலுார்;முதுமலை, வனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வன ஊழியரை, காட்டெருமை முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம், நம்பிகுன்னு பகுதியில், வன காவலர் குன்மாரி, 39, மற்றும் மூன்று வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று காலை வன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வனப்பகுதி வழியாக நடந்து சென்ற போது முட்புதரிலிருந்து, திடீரென வெளிய வந்த காட்டெருமை, வன காவலரை முட்டி தாக்கியது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு காட்டெருமை விரட்டி அவரை மீட்டனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வானவர் சித்தராஜ் மற்றும் வன ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

