/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு
/
ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு
ADDED : மே 01, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே திம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டான், 65. இவரது மனைவி முருகம்மாள், 60. இந்த தம்பதியினர் தங்களது வீட்டில் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, இவரது வீட்டில் சினையாக இருந்த வெள்ளாடு ஒன்று, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது.
ஆடு பிரசவத்தின் போது 1 முதல் 3 குட்டிகளை போடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கிட்டானின் ஆடு, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

